கோவை ஈச்சனாரி தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை - கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது…!

ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரி அருகே மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த கசிய தகவலின் படி, தனிப்படை உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான போலீசார் மூவரை கைது செய்தனர்.



கோவை: கோவை ஈச்சனாரி அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர் உட்பட மூவரை மதுக்கரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸார் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரபடுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கோவை ஈச்சனாரி தனியார் கல்லூரி அருகே கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து சாதாரண உடையில் சென்ற தனிப்படை உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான போலீஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான நின்றுக் கொண்டிருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரனையின் போது, முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை சோதனை செய்த போது கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

முதல் கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர்கள் தென்காசியை சேர்ந்த மகேந்திரன் (22), சுப்பிரமணியன் (23), மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை (21) என்பது தெரியவந்தது.

இதில் மகேந்திரன், சுப்பிரமணி இருவரும் கோவை ஹோப்ஸ் பகுதியில் தங்கி இரு சக்கர வாகன டேக்ஸி ஓட்டிக் வருகின்றனர் என்பதும் அண்ணாமலை, தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த சுமார் 2.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...