ஆன்லைன் ரம்மி விவகாரம்: ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி கோவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிரதமருக்கு கடிதம்..!

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் தராத தமிழக ஆளுநரை திரும்ப பெறக்கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்ப வந்த கோவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தபால் நிலையம் முன்பு கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் தற்பொழுது தொடர் தற்கொலைகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்திலும் கடந்த வாரம் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

எனவே இந்த விளையாட்டை தடை செய்ய கோரி பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கு தடை விதிக்க ஆளுநர் கையெழுத்திடவில்லை என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பு எனக் கூறி, அவரை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (DYFI) பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.



மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்தில் கடிதம் அனுப்ப வந்த DYFI அமைப்பினர் மாவட்ட செயலாளர் அர்ஜுன் தலைமையில் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பியவாறு வந்தடைந்தனர்.



மேலும் தபால் நிலையம் முன்பும் கண்டன முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதில் SFI அமைப்பினர் சிலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...