திருப்பூர் அருகே கோவில் பூசாரி மர்மமான முறையில் எரித்துக் கொலை - போலீசார் தீவிர விசாரணை..!

திருப்பூர் வெங்கமேடு பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்த சுப்பிரமணி என்பவர் அதே கோவிலுக்கு பின்புறம் எரித்துக் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (72). அவரது மனைவி பார்வதி (65). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணி அப்பகுதியில் உள்ள கோயிலிலேயே தங்கி பூசாரியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவரது மகள் கவுரி, சுப்பிரமணி தங்கியிருந்த அறைக்கு உணவு கொடுக்க வந்த போது, அறை முழுவதும் ரத்தமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, கோவிலின் பின்புறம் சென்று பார்த்தபோது, அங்கு எரிக்கப்பட்ட நிலையில் சுப்பிரமணி சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே முன்விரோதம் காரணமாக சுப்பிரமணி கொலை செய்யப்பட்டாரா.? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் பூசாரி எரித்துக் கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...