சென்னையில் குண்டு வெடிக்கும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் - கோவையை சேர்ந்த நபர் கைது..!

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொப்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த பீர்முகமது என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் மதுக்கடையில் இலவசமாக மதுபாட்டில் தராததால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.


கோவை: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், சென்னையில் குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில் அழைப்பு விடுத்த நபரின் எண்ணை ஆய்வு செய்த போது, கோவையில் இருந்து அழைக்கப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த பீர்முகமது என்பது தெரியவந்தது.

இதையடுத்து கோவை குனியமுத்தூர் போலீஸார் பீர்முகமதுவை கைது செய்து நடத்திய விசாரணையில் இவர் வழக்கமாக வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே டாஸ்மாக் கடையில் இலவசமாக மது பாட்டில் கொடுக்காத கோபத்தில் தான் வெடி குண்டு வைத்தாக மிரட்டல் விடுத்ததாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...