அவினாசிலிங்கம் பல்கலை கழகத்திற்கும் தென் கொரிய ஜிஜூ தேசிய பல்கலை கழகத்திற்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும்  அவினாசிலிங்கம் பல்கலை கழகத்திற்கும், தென் கொரியாவில் செயல்பட்டு வரும் ஜிஜூ தேசிய பல்கலை கழகத்திற்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்பொழுது கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது வரும் 5 வருடங்கள் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த ஒப்பந்தத்தின் நோக்கமானது ஒருங்கிணைந்த ஆராய்ச்சி, பயிற்சிக்காக மாணவர்கள் பரிமாற்றம், சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்களுக்காக திட்டங்களை தயாரிப்பது உள்ளிட்டவை ஆகும்.

ஜிஜு பல்கலைக் கழகத்தின் விலங்கியல் பயோ டெக்னாலஜி பேராசிரியரும், தேசிய முதன்மை ஆலோசகருமான முனைவர் மின்தேசன் இந்திய மாணவியரின் பயோ டெக்னாலஜி துறையில் வளர்ச்சியை கண்டறிந்துள்ளார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திற்கு உறுதுணையாக செயல்பட்டுள்ளார். 

அவர் ஆலோசகராக இருந்த காலத்தில் கொரியாவில் உள்ள பல முன்னணி பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதற்கு உதவியுள்ளார். 

அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் ஜினோமிக்ஸ், மெட்டாபோலோமிக்ஸ் மற்றும் மருத்துவ குணமுள்ள தாவரங்களின் பன்புகளைக் குறித்து குறுகிய மற்றும் நீண்ட கால பயிற்சிகளை பெற இந்த ஒப்பந்தத்தின் மூலம் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது பல்கலை கழகத்தின் பதிவாளராக உள்ள எஸ்.கவுசல்யா இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பயனடைந்தவர் ஆவார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மூன்று மாணவிகள் கல்வி உதவித் தொகையுடன் ஜின்செங் குறித்து ஆராய்ச்சி செய்ய தேர்வாகியுள்ளனர். 6 முதுகலை மாணவிகளும், 2 ஆராய்ச்சி மாணவிகளும் தங்களுடைய ஆராய்ச்சியினை கொரியாவில் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியினை மேற்கொள்ள அவர்களுக்கு முழு உதவிகளும் வழங்கப்படும்.

விலங்கியியல் பயோ டெக்னாலஜி, நியூட்ரிஜீனோமிக்ஸ், ப்ளேன்ட் ஜீனோமிக்ஸ் மற்றும் உணவு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆசிரியர்களும், மாணவிகளும் இணைந்து பணியாற்றுவர்.

மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இளங்கலை படிப்பு பயிலும் மாணவிகளுக்கு கொரியாவில் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...