கோவை வேடப்பட்டி காரில் குட்கா கடத்தல் - ராஜஸ்தான் மாநில இளைஞர் கைது - 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்…!

வேடப்பட்டி அருகே வடவள்ளி காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ராஜஸ்தான் மாநிலத்தில் சேர்ந்த கோபல்குமார் என்பவர் காரில் 100 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் முழுவதும் குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மேலும், தனிப்படை அமைத்து ரோந்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வடவள்ளி காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் வீரகேரளம் - வேடப்பட்டி சாலையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, வீரகேரளம் பேருந்து நிறுத்தம் வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தி வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்டனர். அப்போது, உள்ளே குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபால்குமார் (24) என்பதும், இவர் கோவையில் தங்கி மொத்தமாக குட்கா பொருட்களை எடுத்து வந்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.



பின்னர், கோபால் குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 100 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...