திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள் - நடவடிக்கை தொடர்பாக ஆணையர் பிரபாகரன் நேரில் ஆய்வு

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தின் போது வழங்கிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் தீர்வு தொடர்பாக மனு அளித்த பொதுமக்களிடம் காவல் ஆணையர் பிரபாகரன் நேரில் அழைத்து விசாரணை.


திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதம் தோறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான மக்கள் தங்கள் புகார்களை மனுக்களாக மாநகர காவல் ஆணையரிடம் வழங்குவது வழக்கம்.

இவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வந்தது. இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கு மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தி இருந்தார்.

அதன் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் 15ஆம் தேதி வரை 208 பேர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தனர். இதில் 163 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.



மீதமுள்ள 45 மனுக்கள் தீர்வு காணப்படாத நிலையில் புகார் கொடுத்த பொதுமக்களை நேரில் அழைத்து காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் கேட்டறிந்தார்.



இதில் காவல்துறை எடுத்த நடவடிக்கை திருப்திகரமாக இல்லாததை மனு கொடுத்த பொதுமக்கள் கூறியதை தொடர்ந்து மீண்டும் மனுவை விசாரணை செய்து பொதுமக்கள் கொடுத்த புகாரை விசாரணை செய்ய காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.



மேலும் மனுதாரர்களின் கருத்துக்களை முறையாக விசாரித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு அனுப்பப்படும் என்றும் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...