திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள் - நடவடிக்கை தொடர்பாக ஆணையர் பிரபாகரன் நேரில் ஆய்வு

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தின் போது வழங்கிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் தீர்வு தொடர்பாக மனு அளித்த பொதுமக்களிடம் காவல் ஆணையர் பிரபாகரன் நேரில் அழைத்து விசாரணை.


திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதம் தோறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான மக்கள் தங்கள் புகார்களை மனுக்களாக மாநகர காவல் ஆணையரிடம் வழங்குவது வழக்கம்.

இவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வந்தது. இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கு மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தி இருந்தார்.

அதன் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் 15ஆம் தேதி வரை 208 பேர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தனர். இதில் 163 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.



மீதமுள்ள 45 மனுக்கள் தீர்வு காணப்படாத நிலையில் புகார் கொடுத்த பொதுமக்களை நேரில் அழைத்து காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் கேட்டறிந்தார்.



இதில் காவல்துறை எடுத்த நடவடிக்கை திருப்திகரமாக இல்லாததை மனு கொடுத்த பொதுமக்கள் கூறியதை தொடர்ந்து மீண்டும் மனுவை விசாரணை செய்து பொதுமக்கள் கொடுத்த புகாரை விசாரணை செய்ய காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.



மேலும் மனுதாரர்களின் கருத்துக்களை முறையாக விசாரித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு அனுப்பப்படும் என்றும் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...