கோவையில் உயர்ரக போதை பொருள் பதுக்கி வைத்திருந்த நபர் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை

பெ.நா.பாளையம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க காவல் ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, விகனேஷ் என்ற நபர் மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக போதைப் பொருளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.



கோவை: கோவை மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க மாநகர மற்றும் மாவட்ட போலீசார வாகன சோதனை, இரவு ரோந்து என அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தனிப்படை மற்றும் மதுவிலக்கு அமலாக்க போலீசார் உட்பட காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் போதை பொருட்களுக்கு முற்றிலும் ஒழிக்க களமிறங்கியுள்ளனர்.

அதன்படி, கோவை புற நகர் பகுதியான பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க காவல் ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கோவிந்த நாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார்.

அதனால், அந்த நபரை விசாரித்த போது அவர் கொண்டையம் பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ்(26) என்று என்று தெரியவந்தது. பின்னர், அவரது உடமைகளை தணிக்கை செய்த போலீசார், விக்னேஷ் அதீத போதை ஏற்றக் கூடிய மெத்தபெட்டமைன் (Methamphetamine) என்ற உயர்ரக போதைப் பொருளான பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.



இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்கு அவர் வைத்திருந்த 5.25 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் மற்றும் 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.



பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போதைப் பொருட்கள் விற்பது அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செய்லோடுபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் தயங்காமல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...