கோவையில் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் நடைபெற்ற வால்வ் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு

அவிநாசி சாலையில் சிஐஐ சார்பில் நடைபெற்ற வால்வ் தொழில்நுட்ப கருத்தரங்கில், இந்திய வால்வ் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பிரனை எஸ்.கார்க், சிஐஐ-யில், இயந்திர மனித பயன்பாடு, அறிவு சார்ந்த உற்பத்தி அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.



கோவை: இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் வால்வ் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் கோவை மாவட்ட தலைவர் பிரசாந்த் சுப்பிரமணியன் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். இதனை தொடர்ந்து பேசிய கருத்தரங்க தலைவர் ரமேஷ் பாபு நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.



இந்த நிகழ்வுக்கு தலைமை வகித்த, இந்திய வால்வ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரனை எஸ்.கார்க் பேசியதாவது, மாறி வரும் காலம், தேவைகளுக்கு ஏற்ப உலக சந்தையில் சிறந்து விளங்கும் நோக்கில் இந்திய வால்வ் தொழில் நிறுவனங்களில் இயந்திர மனித பயன்பாடு அதிகரித்துள்ளது.

அறிவு சார்ந்த உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இந்த கருத்தரங்கில் பங்கேற்ற வல்லுநர்கள், பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். இறுதியாக சிஐஐ கோவை துணை தலைவர் செந்தில் கணேஷ் நன்றியுரையாற்றினார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...