கோவை சிங்காநல்லூர் அருகே வியாபாரியை மிரட்டி டிவி, ரூ.47,000 பணம் பறித்த காவலர் உட்பட இருவர் கைது..!

சிங்காநல்லூர் அருகே வியாபாரியை மிரட்டி 5 டிவிகள், கேஸ் அடுப்பு மற்றும் ரூ.47,000 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற சூலூர் காவல் நிலைய காவலர் முருகன் மற்றும் அவரது நண்பர் பிரதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் மசக்காளிபாளையம் கம்பன் நகரை சேர்ந்தவர் தாசிம் (26), இவர் டிவி மற்றும் கேஸ் அடுப்பு விற்பனை செய்து வருகிறார். நேற்று முன் தினம், அவர் தனது நண்பரான சாரூக் என்பவருடன் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் டிவி விற்பனை செய்து கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த சூலூர் காவல் நிலைய காவலர் முருகன் என்பவர் தாசிமை போலியான டிவியை விற்பனை செய்கிறாயா? என மிரட்டி அவரிடமிருந்த டிவியை வாங்கியுள்ளார்.

மேலும் அவருடன் இருந்த சாரூக்கின் கைகளை கட்டி, அவரை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள வீட்டிற்கு காரில் அழைத்துச் சென்று, அங்கிருந்த 5 டிவிகள், கேஸ் அடுப்பு மற்றும் ரூ.47,000 பணத்தை பறித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாசிம் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் சூலூர் காவல் நிலைய காவலர் முருகன் மற்றும் அவரது நண்பர் பிரதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக காவலர் ஒருவரே வியாபாரியை மிரட்டி டிவி, பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...