கோவையில் கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான கட்டிடம் மீட்பு - இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை

கோவை தெற்கு தாலுகா எல்லைக்குட்பட்ட, கோட்டைமேடு பகுதியிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 4500 அடி பரப்பிலான வணிக கட்டிடத்தை நீதிமன்ற உத்தரவின்படி இந்து சமய அறநிலையத் துறையினர் மீட்டுள்ளனர்.



கோவை: கோவை கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள வணிக கட்டிடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று மீட்டனர்.



கோவை தெற்கு தாலுகா எல்லைக்குட்பட்ட, கோட்டைமேடு பகுதியிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான வணிக கட்டடம், நீண்ட நாட்கள் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.



கட்டிடத்தை மீட்க நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி தலைமையிலான அதிகாரிகள் இன்று கோவிலுக்கு சொந்தமான 4,500 சதுர அடி பரப்புள்ள வணிக கட்டிடத்தை மீட்டனர்.

இது குறித்து, தெரிவித்த அறநிலையத் துறை அதிகாரிகள், இந்த கோவிலுக்கு சொந்தமான வணிக கட்டிடம், நீண்ட நாட்களாக குத்தகைதாரர் அல்லாமல் மூன்றாம் நபரின் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டது.



இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்குப்பின், அந்த வணிக கட்டடம் கோவிலின் கட்டுப்பாட்டுக்கு இன்று கொண்டு வரப்பட்டது. மீட்கப்பட்டுள்ள இந்த வணிக கட்டடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூபாய் 6 கோடி, என்றனர்.

இந்த நிலையில், கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனியாரிடம் இருந்து மீட்ட இந்து சமய அறநிலையத் துறையிருக்கு கோவில் நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...