உதகையில் துவங்கிய ஹோம் மேட் சாக்லேட் திருவிழா; சுற்றுலா பயணிகளை கவர்ந்த 180க்கும் மேற்பட்ட சாக்லேட் வகைகள்..!

ரோஸ் மேரி, தைம் சாக்லேட் பெப்பர் ஹனி சாக்லேட் உட்பட 187 வகையான சாக்லேட்டுகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. ஊட்டி YWCA அரங்கத்தில் நடைபெறும் சாக்லேட் திருவிழா கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி பத்து நாட்கள் நடைபெற உள்ளது.



நீலகிரி: உதகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை வரவேற்கும் விதமாக ஹோம் மேட் சாக்லேட் திருவிழா தித்திப்புடன் தொடங்கியது.



நீலகிரி மாவட்டத்தில் ஐரோப்பியர்களின் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோம் மேட் சாக்லேட்டுகளுக்கு என்றே ஒரு தனி மவுசு உள்ளது.



பொதுவாக, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகப்படியாக வாங்கும் பொருளாக உதகை ஹோம் மேட் சாக்லேட்டுகள் உள்ளது என்றால் அது மிகையாகாது.



இந்நிலையில் உதகையில் "ஊட்டி 200" என்ற தலைப்பில் மெகா சாக்லேட் திருவிழா தொடங்கி உள்ளது.



தனியார் சாக்லெட் நிறுவனம் சார்பாக நடத்தப்படும் கண்காட்சியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் விதமாக பாண்ஸ் ஆஃப் கீரின் டீ, மசாலா சாய் எனப்படும் சாக்லேட், ரோஸ் மேரி மற்றும் தைம் சாக்லேட் என மூலிகை பொருட்களை கொண்ட சாக்லேட்டுகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய டார்க் சாக்லேட், ஜிஞ்சர் பில்லிங் சாக்லேட், பெப்பர் ஹனி சாக்லேட் உட்பட 187 வகையான சாக்லேட்டுகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இந்த கண்காட்சியின் மேலும் ஒரு சாதனைக்குரிய சிறப்பு அம்சமாக உதகை உருவாகி 200 வது ஆண்டை குறிக்கும் விதமாக 200 கிலோவில் 187 வகையான சாக்லேட்டுகள் இடம்பெற்றிருந்தன. இந்தியா மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பித்திருந்த நிலையில்,

இந்தியா மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தை சேர்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.



ஆய்வு மேற்கொண்டதில், முதல் முறையாக நாட்டில் 180 வகையான டார்க் சாக்லேட்டு வகைகளை கண்காட்சிபடுத்தியது உதகையில் தான் என்பதை உறுதி செய்து, அதற்கான சான்றிதழ் மற்றும் விருதுகளை ஆசிய சாதனை புத்தகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விவேக், கண்காட்சியை ஏற்பாடு செய்த தனியார் சாக்லேட் நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்களுக்கு வழங்கினார்.



உதகை YWCA அரங்கத்தில் இன்று துவங்கிய இந்த சாக்லேட் திருவிழா கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி பத்து நாட்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...