பன்னீர் செல்வம் முதல்வராக இருக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம் என கோவை முன்னாள் மேயர் ராஜ்குமார் பேட்டி


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும் எனவும், பன்னீர் செல்வம் முதல்வராக இருக்க வேண்டும் என்பதே அனைத்து அ.தி.மு.க தொண்டர்களின் விருப்பமாக இருக்கின்றது எனவும் கோவை முன்னாள் அ.தி.மு.க மேயர் ராஜ்குமார் வலியுறுத்தியுள்ளார்.



கோவை முன்னாள் அ.தி.மு.க  மேயர் ராஜ்குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழக முதல்வராக இருக்கும் பன்னீர் செல்வத்தை ஆதரிப்பது என முடிவு செய்து இருப்பதாகவும், கோவை மாநகரில் உள்ள கட்சி  நிர்வாகிகள் அனைவரும் அவரை ஆதரிக்க போவதாகவும் தெரிவித்தார். 

சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயப்படுத்தி கடத்தப்பட்டு இருப்பதாகவும், இது ஜனநாயக விரோத போக்கு எனவும் அவர்களை மீட்க வேண்டும் என தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் செல்போன்கள் அனைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்த அவர், விரைவில் கோவையில் உள்ள ஆதரவாளர்கள் பட்டியலுடன் சென்னை சென்று பன்னீர் செல்வத்தை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

அ.தி.மு.க கட்சிக்காரன் என்ற உணர்வுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாக தெரிவித்த அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிசன் அமைக்கப்பட இருப்பது வரவேற்கத்தக்கது என கூறினார்.

மேலும், கொடநாடு எஸ்டேட்டினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அளிக்க வேண்டும் எனவும், முதல்வராகும் தகுதி  பன்னீர்செல்வத்திற்கு மட்டுமே இருக்கின்றது எனவும் கோவை முன்னாள் மேயர் ப.ராஜ்குமார் தெரிவித்தார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...