கோவையில் உயர்ரக போதை பொருள் மற்றும் கஞ்சா விற்ற இருவர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம் - ஆட்சியர் உத்தரவு

உயர்ரக போதை பொருள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய பகுதியில் மெட்டாபேட்டமைன் (Methamphetamine) என்னும் உயர்ரக போதை பொருளை விற்பனை செய்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் அகமது (33) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதே போல, அன்னூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சின்ன தடாகம், மடத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(33) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக கிஷோர் அகமது மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார்.

அதன்படி, காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

ஆட்சியரின் உத்தரவுவின், அடிப்படையில் போதை பொருள் விற்பனை குற்றவாளிகளான கிஷோர் அகமது (33) மற்றும் கஞ்சா வழக்கு குற்றவாளியான சுரேஷ்குமார் (33) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

நடப்பாண்டில் போதை பொருள்கள் (கஞ்சா, Methamphetamine) விற்பனையாளர்கள் 9 நபர்கள் உட்பட மொத்தம் 37 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...