முதுமலை புலிகள் காப்பகத்தில் முதல்முறையாக பட்டாம்பூச்சிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் வனத்துறையினர் இணைந்து முதல் முறையாக நடத்தும் 2 நாள் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுக்கும் பணியில், 15 குழுக்கள் பங்கேற்பு.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏராளமான காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் என பல்வேறு வன விலங்குகள் இங்கு இருக்கும் நிலையில் வல்சர் எனப்படும் பிணம் தின்னி கழுகுகள், ஹார்ன்பில் எனப்படும் இருவாச்சி பறவை, மீன் கொத்தி, மரங்கொத்தி, பச்சை கிளி என 200-க்கும் மேற்பட்ட வகையான பறவைகளும் உள்ளன.



அவற்றுடன் பல வகையான வண்ணத்துப் பூச்சிகளும் இருக்கும் நிலையில் முதல் முறையாக வண்ணத்து பூச்சிகளை கணக்கெடுக்கும் பணி இன்று காலை முதல் தொடங்கப்பட்டு உள்ளது.



இயற்கை மற்றும் பட்டாம்பூச்சிகள் அமைப்பினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



சுமார் 15 குழுக்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதும் 328 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளதாகவும், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 250 வகையான பட்டாம்பூச்சிகள் இருப்பதாகவும் முதுமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக முதுமலை வனப்பகுதி என்பது தமிழக, கர்நாடக மற்றும் கேரளா வனப்பகுதியோடு ஒட்டியுள்ளதால் புதிய வகை பட்டாம்பூச்சிகள் இங்கு இருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.



இன்று தொடங்கியுள்ள இந்த கணக்கெடுப்பு பணி நாளை மாலை வரை நடைபெறும் என்பதால், அதன் பின்னர் தான் முதுமலையில் எந்த வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன என்பது தெரிய வரும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் வித்யா மற்றும் தெப்பக்காடு வனச்சரகர் மனோஜ் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...