திருப்பூர் ரயில் நிலையம் முன்பு ஹிந்தியில் வைக்கப்பட்ட ‘வேலைக்கு ஆட்கள் தேவை’ பேனரால் பரபரப்பு

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் ஆர்டர்கள் குறைந்துள்ளதாக கூறப்படும் சூழலில் வேலைக்கு ஆள் தேவை என ஹிந்தியில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனரால், தமிழக பணியாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையம் முன்பு ஹிந்தியில் அச்சடிக்கப்பட்ட‘வேலைக்கு ஆட்கள் தேவை’ பேனர் வைக்கப்பட்டுள்ளதால், தமிழக பணியாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர அளவிலான ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த பின்னலாடை நிறுவனங்களில் ஆர்டர்கள் குறைந்து வேலை இல்லை என பரவலாக கூறப்பட்டு வருகின்றன.



இந்நிலையில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு வேலைக்கு ஆட்கள் வேண்டும் என ஹிந்தி மொழியில் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஹிந்தி மொழியில் மட்டும் அச்சடிக்கப்பட்டுள்ள அந்த பேனரில் வேலைக்கு ஆள் வேண்டும் என்றும், நூற்பாலை, டையிங், காம்பேக்டிங், எம்பிராய்டரி, கோழி பண்ணை, ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்கள் தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பத்தாயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கப்படும் என தொடர்பு எண்ணுடன் பெரிய அளவில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி மொழியில் மட்டுமே இந்த பேனர் அச்சடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதால், தமிழக தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...