திருப்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கணேசன் - ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நேரில் ஆய்வு செய்தபோது, கழிவறையை முறையாக பராமரிக்காத மருத்துவமனை ஊழியர்களை எச்சரிக்கை விடுத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்பட உள்ள வேலை வாய்ப்பு முகாம் குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக திருப்பூருக்கு வருகை தந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, தொழிலாளர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், மருந்து மாத்திரைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளதா மற்றும் வரும் தொழிலாளர்களுக்கான குடிநீர் வசதி, கழிவறை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



மேலும் கோப்புகளை ஆய்வு செய்த அவர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சரின் வருகையின் போது மருத்துவமனை வளாகத்தில் கழிவறை உள்ளிட்டவை சுத்தம் செய்யப்படாமல் இருந்துள்ளது.



இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் கணேசன், மருத்துவமனை ஊழியர்களிடம் இதுபோன்றுதான் எப்போதும் வைத்திருப்பீர்களா உங்களை சஸ்பெண்ட் செய்ய சொல்லவா என எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து பூலுவபட்டியில் விரிவாக்கப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டுமான பணிகளையும் தொழிற்கல்வி நிறுவனத்தையும் அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் வினீத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...