திருப்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கணேசன் - ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நேரில் ஆய்வு செய்தபோது, கழிவறையை முறையாக பராமரிக்காத மருத்துவமனை ஊழியர்களை எச்சரிக்கை விடுத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்பட உள்ள வேலை வாய்ப்பு முகாம் குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக திருப்பூருக்கு வருகை தந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, தொழிலாளர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், மருந்து மாத்திரைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளதா மற்றும் வரும் தொழிலாளர்களுக்கான குடிநீர் வசதி, கழிவறை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



மேலும் கோப்புகளை ஆய்வு செய்த அவர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சரின் வருகையின் போது மருத்துவமனை வளாகத்தில் கழிவறை உள்ளிட்டவை சுத்தம் செய்யப்படாமல் இருந்துள்ளது.



இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் கணேசன், மருத்துவமனை ஊழியர்களிடம் இதுபோன்றுதான் எப்போதும் வைத்திருப்பீர்களா உங்களை சஸ்பெண்ட் செய்ய சொல்லவா என எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து பூலுவபட்டியில் விரிவாக்கப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டுமான பணிகளையும் தொழிற்கல்வி நிறுவனத்தையும் அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் வினீத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...