கோவை கார் வெடிப்பு வழக்கு: உக்கடம், கரும்புக்கடை பகுதியில் உள்ள கைதானவர்களின் வீடுகளில் தேசிய முகமை அதிகாரிகள் அதிரடி ரெய்டு..!

உக்கடம், கோட்டைமேடு, கரும்புக்கடை, ஜி எம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள கைதனவர்களின் ஐந்து பேரின் வீடுகளில் தற்பொழுது 5 குழுக்களாக என்.ஐ. ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜமீஷா மூபின் என்பவர் பலியான நிலையில், வழக்கில் கைதானவர்களின் வீடுகளில் இன்று தேசிய முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, வழக்கு தமிழ்நாடு போலீசாரால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தீவிரவாத அமைப்புகளுடன் கைதானவர்களுக்கு உள்ள தொடர்பு மற்றும் தீவிரவாத சதித்திட்டம் தீட்டியது தெரியவந்ததையடுத்து, விசாரணை என் ஐ ஏ வசம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை தேசிய முகமை அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அவ்வப்போது அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வழக்கில் கைதானவர்கள் வீடுகளில் தேசிய முகமை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தம், இவ்வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களில் பெரோஸ் கான், உமர் பாரூக், முஹம்மது அசாருதீன், அப்சர் கான் மற்றும் பெரோஸ் ஆகிய ஐந்து பேரை மட்டும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்றிரவு கோவை அழைத்து வந்தனர்.

தற்பொழுது, உக்கடம், கோட்டைமேடு, கரும்புக்கடை, ஜி எம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள இந்த ஐந்து பேரின் வீடுகளில் என்.ஐ. ஏ அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய முகமை அதிகாரிகளின் ரெய்டு உக்கடம், கோட்டைமெடு பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, நேற்று ஐந்து பேரின் வீடுகளுக்கு அழைத்து சென்று என்.ஐ. ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட பின்னர், அவர்களை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...