'அதிமுக உட்கட்சி பிரச்சனையில், மற்ற கட்சிகள் தலையிட முடியாத சூழல் உள்ளது' ம.ஜ.க கோவை மாவட்ட செயலாளர்.


அதிமுக கட்சியின் நிலைபாடு குறித்து கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி  சிம்ப்ளிசிட்டி'க்கு அளித்த சிறப்பு பேட்டியில், மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட செயலாளர் அப்பாஸ் கூறுகையில்:

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கிறது, அதற்கு மற்ற கட்சிகள் தலையிட முடியாத சூழல் உள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சி பொறுத்தவரை மாநில தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதற்கேற்பதான் முடிவு செய்ய முடியும். அதிமுக கட்சியின் பொது செயலாளர் சசிகலாவிற்கு தற்போது மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும், தமிழகத்திற்கு முதலைவராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டால் அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதன் மூலம் மக்களின் எதிர்ப்பில் இருந்து விடுபடலாம். உதாரணமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தபடி தமிழகத்தில் படிப்படியாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதை சசிகலா பதவியேற்றால் முழுமையாக தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற நல்ல முயற்சியை செய்வதன் மூலம் தமிழக மக்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. 

தற்போது கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதன் மூலம் அதிமுக பொது செயலாளர் சசிகலா தமிழகத்திற்கு முதலமைச்சராக பதவியேற்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு சசிகலா தமிழக முதல்வராக பதவி வகித்தால் மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கும் இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...