கோவை நீலாம்பூர் பகுதியில் அதிகாலை கோர விபத்து: காவல் ஆய்வாளரின் மகன் பரிதாபமாக பலி..!

இன்று அதிகாலை கரையம்பாளையம் ஜங்ஷன் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கல் மீது கார் மோதியதில், காரில் பயணித்த ஒருவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.



கோவை நீலாம்பூர், கரையம்பாளையம் ஜங்ஷன் அருகே அதிகாலை நடந்த கோர விபத்தில், காவல் ஆய்வாளரின் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் முருகாசலம். இவர் மகன் கார்த்தி (18), அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். இவரும், இவரது 17 வயதுடைய நண்பரும் நேற்று காரில் பயணத்திருக்கின்றனர். அப்போது, கார்த்தியின் நண்பர் காரை ஓட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிகாலை கரையம்பாளையம் ஜங்ஷன் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கல் மீது கார் மோதியது. இதில், காரில் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்தது. மேலும், காரில் பயணித்த இருவரும் படுகாயம் அடைத்தனர்.

இதில், காவல் அனையாளரின் மகனான கார்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவருடன் இருந்த கார்த்திக்கின் நண்பர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் எங்கிருந்து வந்தது? எதற்காக இங்கே அதிகாலை வேளையில் சென்றார்கள்? என விபத்தின் பின்னணி குறித்து போலீசார் புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...