கோவை கிணத்துக்கடவு - பொள்ளாச்சி சாலையில் பைக் மீது கார் மோதி விபத்து: ஒருவர் பலியான சோகம்

கிணத்துக்கடவு - பொள்ளாச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நடராஜ் என்பவர், வளைவில் திரும்பியபோது, பின்னால் வந்த சொகுசு கார் மோதியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள பொன்மலை நகர் பகுதியில் வசித்து வந்தவர் நடராஜ் (51). இவர் தனது இருசக்கர வாகனத்தில் கிணத்துக்கடவு - பொள்ளாச்சி சாலையில் சென்றுள்ளார்.



அப்போது வளைவு பகுதியில் திரும்பும் போது பின்னால் வந்த சொகுசு கார் ஒன்று நடராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த நடராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே நடராஜ் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் சொகுசு காரை ஓட்டி வந்த விபத்து ஏற்படுத்திய கிஷோர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...