சிக்கிமில் விபத்தில் உயிரிழந்த பாலக்காட்டை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் கோவை விமான நிலையம் வந்தடைந்தது

சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த பாலக்காடு பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் வைசாக்கின் உடல் விமானம் மூலம் கோவை வந்த நிலையில், ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


கோவை: சிக்கிம் மாநிலத்தில் உள்ள சாட்டன் என்ற இடத்திலிருந்து கடந்த டிசம்பர் 23ஆம் தேதி தங்கு என்ற இடத்தை நோக்கி ராணுவ வாகனம் ஒன்று வீரர்களுடன் சென்றது.

அப்போது வடக்கு பகுதியில் செமா என்ற இடத்தில் வளைவில் வாகனம் திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் உடனே பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ வாகனத்தில் இருந்த 16 வீரர்கள் உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தற்போது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் வைசாக் என்பவரும் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் இன்றைய தினம் கோவை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.



அங்கு அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செய்யப்பட்டது.

அப்போது, அட்மினிஸ்ட்ரேடிவ் கமெண்ட் பிஜு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவரது உடல் அமரர் ஊர்தி மூலம் அவரது சொந்த ஊரான பாலக்காடு கொண்டு செல்லப்பட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...