சிக்கிமில் விபத்தில் உயிரிழந்த பாலக்காட்டை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் கோவை விமான நிலையம் வந்தடைந்தது

சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த பாலக்காடு பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் வைசாக்கின் உடல் விமானம் மூலம் கோவை வந்த நிலையில், ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


கோவை: சிக்கிம் மாநிலத்தில் உள்ள சாட்டன் என்ற இடத்திலிருந்து கடந்த டிசம்பர் 23ஆம் தேதி தங்கு என்ற இடத்தை நோக்கி ராணுவ வாகனம் ஒன்று வீரர்களுடன் சென்றது.

அப்போது வடக்கு பகுதியில் செமா என்ற இடத்தில் வளைவில் வாகனம் திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் உடனே பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ வாகனத்தில் இருந்த 16 வீரர்கள் உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தற்போது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் வைசாக் என்பவரும் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் இன்றைய தினம் கோவை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.



அங்கு அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செய்யப்பட்டது.

அப்போது, அட்மினிஸ்ட்ரேடிவ் கமெண்ட் பிஜு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவரது உடல் அமரர் ஊர்தி மூலம் அவரது சொந்த ஊரான பாலக்காடு கொண்டு செல்லப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...