தீவிரமடையும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : நீலகிரி மாவட்ட முன்னாள் எஸ்.பி-க்கு சிபிசிஐடி தனிப்படை சம்மன்

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது, நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த முரளிக்கு, சிபிசிஐடி தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், அவர் ஜனவரி மாதத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


நீலகிரி: தமிழ்நாட்டில் நடந்த கொலை கொள்ளை சம்பவங்களில் கொடநாடு பங்களா கொலை மற்றும் கொள்ளை பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் குறித்து தமிழ்நாடு காவல்துறை விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்த, மர்ம முடிச்சுகளை அவிழ்க்க மறு விசாரணை நடைபெற்று வருகின்றன.

முன்னதாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதேபோல், அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜ் உறவினர்கள், குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்றது.

மேலும், சசிகலா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவரும், டிடிவி தினகரனின் நண்பருமான நாமக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் செந்தில், நமது அம்மா நாளிதழ் முன்னாள் ஆசிரியர் அழகுராஜ் உள்ளிட்டோரிடமும் தனிப்படை போலீசார் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டு வழக்கின் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இவ்வழக்கின் முக்கிய நபராக கொடநாடு சிசிடிவி ஆபரேட்டர் தினேஷிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து, சிபிசிஐடி தனிப்படை போலீசார் கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்ற பொழுது, நீலகிரி மாவட்ட எஸ்பியாக இருந்த முரளிக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

முரளி தற்போது ஆந்திராவில் சிபிஐ காவல் பிரிவில் பணியாற்றி வருகிறார். சிபிஐ தலைமை அலுவலகம் மூலமாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் முன்னாள் எஸ்.பி.முரளி ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...