கோவையில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததை வீட்டில் சொல்லாமல் இருந்ததால் விபரீதம் - சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழப்பு

கரும்புக்கடை பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் சில தினங்களுக்கு முன்பு கீழே விழுந்து வயிற்று பகுதியில் அடிபட்டதை பெற்றோரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். பின்னர், உடல் நிலை பாதிப்படைந்ததால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.



கோவை: கோவை கரும்புக்கடை சேரன் நகரை சேர்ந்தவர் சையது அபுதாஹிர் (42). கூலி தொழிலாளி. இவரது மகன் பக்கிங் சம்சுதீன் (12), இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் காரணமாக சிறுவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளான். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, தனக்கு கடுமையான வயிற்று வலி உள்ளதாக சிறுவன், பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, பக்கிங் சம்சுதீனை பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றுப் பகுதியில் அடிபட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, எப்படி அடிப்பட்டது என்று சிறுவனிடம் தந்தை விசாரித்த போது, கடந்த 24 ஆம் தேதி குனியமுத்தூர் பள்ளிவாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததாகவும், வீட்டில் சொல்ல பயமாக இருந்ததால் மறைத்ததாக சிறுவன் தெரிவித்துள்ளான்.

பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பக்கிங் சம்சுதீன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...