கோவை மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் பயிற்சி முகாம் நிறைவு

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வந்த மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான 15 நாள் வருடாந்திர நினைவூட்டல் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மாநகர காவல் ஆணையர் கலந்துகொண்டு பயிற்சி காவலர்களை பாராட்டினார்.



கோவை: தமிழகம் முழுவதும் ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் பயிற்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.



15 நாட்கள் நடைபெறும் இந்த பயற்சியில் நவீன ஆயுதங்களை கையாளுதல், லத்தி, கண்ணீர் புகை குண்டுகளை கையாளுதல், கலகக் கூட்டத்தை கலைத்தல், அணி வகுப்பு கவாத்து, கைதி வழிக்காவல் பணி, பண வழிகாவல் பணி, காப்புபணி, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பணி ஆகிய பணியின் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, மன அழுத்தம் கையாளுதல், உடல் நலம் பேணுதல், ஆரோக்கிய உணவு முறை, ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும்.



இந்த பயிற்சியின் நிறைவு விழா காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பயிற்சி முடித்த காவலர்களின் கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



இதையடுத்து மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயுதபடை துணை ஆணையர் முரளிதரன், உதவி ஆணையர் சேகர், ஆய்வாளர்கள் கோவிந்தராஜூ, பிரதாப்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...