உதகை அருகே காட்டு யானை தாக்கியதில் குரும்பர் இன ஆதிவாசி ஒருவர் பலியான சோகம்

உதகை அருகேயுள்ள மாவனல்லா கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஆதிவாசி ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மாவனல்லா கிராமத்தை சேர்ந்தவர் மாதன் (55). குரும்பர் இன ஆதிவாசியான இவர், தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க மசினகுடிக்கு சென்றுள்ளார். பின்னர் பொருட்களை வாங்கி கொண்டு மாவனல்லாவில் உள்ள அவரது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டுயானை ஒன்று மாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. மாதனின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது, யானை தாக்கியதில் மாதன் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.



உடனடியாக அவரை மீட்டு மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மாதனின் உடல் பிரேத பரிசோதனைகாக உதகை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

மாவனல்லா பகுதியில் சுற்றித் திரியும் இந்த ஒற்றை காட்டு யானை ஏற்கனவே இரண்டு பேரை தாக்கி கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...