பிரதமர் மோடியும், ஜே.பி.நட்டாவும் தமிழ்நாட்டின் மீது சிறப்பு கவனம் செலுத்துகின்றனர் - கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

கோவை விமான நிலையத்தில் பேசிய அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தல் பணிகளை பாஜக தமிழகத்தில் இருந்து தான் துவக்கியுள்ளது என்றும், தமிழகத்தின் மீது பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் நட்டாவும் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.



கோவை: தமிழகத்தின் மீது பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை வழியனுப்ப வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது, பேசியதாவது, மேட்டுப்பாளையம் பொதுக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா பேசியது பாஜகவினரிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி வேட்பாளர்களாக வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் நேற்றைய விழா நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் நட்டா, அன்னூரில் உள்ள இணை தலைவர் வீட்டிற்கு சென்ற பின், இரவு கோவையில் தங்கினார்.

தற்போது இங்கிருந்து ஒடிசா செல்கிறார். எப்போது தேசிய தலைவர் வந்தாலும் தொண்டர்களுக்கு உத்வேகம் தான், தேசிய தலைவர் தமிழகத்திற்கு வருவது புதிது கிடையாது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு வந்து சென்றார். மீண்டும் வந்துள்ளார்.

தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் நட்டாவும் சிறப்பு கவனத்தை செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் கூட்டத்தை கூட தமிழகத்தில் இருந்து தான் துவக்கியுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...