பல்லடம் அருகே 1.5 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனியார் நிறுவனம் - மீட்டுத்தர கோரி பொதுமக்கள் மனு

பல்லடம் அடுத்த கோடங்கிபாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான மயானம் மற்றும் குட்டை நிலத்தை ஆக்கிரமித்துள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து மீட்டுத்தர வலியுறுத்தி பொதுமக்கள், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது சங்கோதிபாளையம் கிராமம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

சங்கோதிபாளையம் பகுதியில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையில் மயானம் மற்றும் குட்டை நிலம் அமைந்துள்ளது. இந்நிலையில், அரசு குட்டையை புனரமைத்து மழை காலங்களில் குட்டையில் தண்ணீர் தேங்கும் வண்ணம் சிறு தடுப்பணையும் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் அப்பகுதியில் புதிதாக தனியார் நிறுவனம் (ஹார்வெஸ்ட் பம்ப்) ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.



இதனிடையே அந்த தனியார் நிறுவனத்தின் வழித்தடத்திற்கு அரசு மயானம் மற்றும் குட்டை நிலத்தை மணல் கொட்டி மூடியதாக கூறப்படுகிறது.



மேலும் குட்டையில் இருந்த மரங்களை அகற்றியும், தடுப்பணையை சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர், பல்லடம் தாசில்தார் உள்ளிட்டோரிடம் மனு அளித்துள்ளனர். அவர்கள் தங்களது மனுவில், அரசுக்கு சொந்தமான 1.5 கோடி மதிப்பிலான நிலத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து உள்ளது என்றும், அதனை மீட்டுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், நிலத்தை மீட்டு தராத பட்சத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...