கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்த பயணியர் நிழற்குடையில் அவரது பெயர் அகற்றம் - பரபரப்பு

கோவை குளத்துப்பாளையம் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையின் பெயர் பலகையில் இருந்த எஸ்.பி.வேலுமணியின் பெயர் அகற்றப்பட்டுள்ளது தொடர்பாக அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி குளத்துப்பாளையம் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியால் திறந்து வைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையில் எஸ்.பி.வேலுமணியின் பெயர் பொறிக்கப்பட்ட இடம் அகற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து, 90வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் ரமேஷ், பகுதி கழக செயலாளர்கள், குலசேகரன், மற்றும் மதனகோபால் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் கோவை மாநகராட்சி தெற்கு மண்டல துணை ஆணையாளரிடம் உடனடியாக பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடை பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கையையும் எழுத்துப்பூர்வமாக அதிமுகவினர் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதனை திமுகவினர் யாரேனும் தான் செய்திருக்க கூடும் என அதிமுகவினர் தரப்பில் கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவரது சட்டமன்ற தொகுதியில் திறந்து வைத்த பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடையில் அவரது பெயர் பொறிக்கப்பட்டது என்றாலும் தற்போது திமுக ஆட்சியிலும் அவரே அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இவ்வாறு இருக்க இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை செய்தவர்கள் யார் என அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...