கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்த பயணியர் நிழற்குடையில் அவரது பெயர் அகற்றம் - பரபரப்பு

கோவை குளத்துப்பாளையம் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையின் பெயர் பலகையில் இருந்த எஸ்.பி.வேலுமணியின் பெயர் அகற்றப்பட்டுள்ளது தொடர்பாக அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி குளத்துப்பாளையம் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியால் திறந்து வைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையில் எஸ்.பி.வேலுமணியின் பெயர் பொறிக்கப்பட்ட இடம் அகற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து, 90வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் ரமேஷ், பகுதி கழக செயலாளர்கள், குலசேகரன், மற்றும் மதனகோபால் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் கோவை மாநகராட்சி தெற்கு மண்டல துணை ஆணையாளரிடம் உடனடியாக பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடை பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கையையும் எழுத்துப்பூர்வமாக அதிமுகவினர் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதனை திமுகவினர் யாரேனும் தான் செய்திருக்க கூடும் என அதிமுகவினர் தரப்பில் கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவரது சட்டமன்ற தொகுதியில் திறந்து வைத்த பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடையில் அவரது பெயர் பொறிக்கப்பட்டது என்றாலும் தற்போது திமுக ஆட்சியிலும் அவரே அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இவ்வாறு இருக்க இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை செய்தவர்கள் யார் என அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...