வீடு கட்டி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி - தாராபுரம் இளைஞர் கைது செய்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் வீடு கட்டித் தருவதாக கூறி ரூ.40 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்ட தாராபுரத்தை சேர்ந்த உதயகுமார் என்பவரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.


கோவை: திருப்பூர் மாவட்டர் தாராபுரம் மேட்டுக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (35). இவர், குறைந்த விலையில் வீடு கட்டி தருவதாக தனது யுடியூப் பக்கத்தில் பல்வேறு விளம்பரங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த விளம்பரங்களை நம்பிய கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த ஆஷா என்ற பெண் அவரை தொடர்பு கொண்டு, செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனது நிலத்தில் வீடு கட்டித் தரும்படி கூறி, முன் பணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை உதயகுமாரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, உதயகுமார் செட்டிபாளையத்தில் உள்ள ஆஷாவின் காலி இடத்தில் வீடு கட்டித் தருவதற்கான முதற்கட்ட வேலைகளை மட்டும் செய்துவிட்டு, வீட்டை கட்டி முடிக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இது சம்மந்தமாக, பாதிக்கபட்ட பெண் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் உத்தரவின் பேரில், கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், தாராபுரத்தை சேர்ந்த உதயகுமார் என்பவர் பொள்ளாச்சி, கோமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இதேபோல் வீடு கட்டி தருவதாக கூறி ரூ.40 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் உதயகுமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...