சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.152 உயர்வு - 41,000-ஐ நெருங்குகிறது ஒரு சவரன் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து, சவரன் ரூ.40,840 க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தொடர்ந்து 40,000 ரூபாயை கடந்து தங்கம் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், உலக சந்தையில் தங்கத்தின் மதிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தங்கத்தின் விலை கடந்த அக்டோபரில் 40 ஆயிரம் ரூபாயை கடந்த நிலையில், செப்டம்பர் மாதம் முதல் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது.

இதனிடையே இன்று சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.5,105 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை, ரூ.152 உயர்ந்து ரூ.40,840 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் அதிகரித்து ரூ.74.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை தொடர்ந்து 40 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால், இனிமேல் அதை வாங்க முடியுமா? என பலரும் அச்சம் கொள்ள தொடங்கியுள்ளனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...