கோவை துடியலூர் அருகே சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி - தப்பியோடிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

துடியலூர் அடுத்த ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டிய நிலையில், பொதுமக்கள் துரத்தியதால், தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே மாநகராட்சி 1வது வார்டு அப்பநாயக்கன் பாளையம் - ஐஸ்வர்யா கார்டன் உள்ளது. இதன் அருகில் நேற்று இரவு மர்ம நபர்கள் தனியார் இடத்தில் இருந்த சந்தன மரத்தை வெட்டி சாய்த்து துண்டு போட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது வெட்டிய சந்தன மரத்தை எடுத்து செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தவர்களை பொதுமக்கள் துரத்தியபோது மரத்தை விட்டு விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாமன்ற உறுப்பினர் கற்பகம் ராஜசேகரன் மற்றும் அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசாரிடம் அப்பநாயக்கன் பாளையம், பன்னீர் மடை, வடமதுரை, என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதிகளில் தொடர்ந்து சந்தன மரங்களை வெட்டி கடத்துவது, வீட்டில் உள்ள காலி கேஸ் சிலிண்டர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இப்பகுதிகளில் போலீசார், இரவு நேர ரோந்து பணிகளை அதிகரித்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையில் வட்டிப் பணத்தை வசூலிக்க சென்ற பைனான்சியர் கொலை: ராஜஸ்தான் நபர் கைது

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பைனான்சியர் அபுதாகிர் பாஷா கொலை செய்யப்பட்ட வழக்கில், வட்டிக்குப் பெற்ற பணத்தை திரும்பக் கே...

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...