கோவை - மேட்டுப்பளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் 800 பேர் கைது

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மண்டல தலைமை போக்குவரத்து அலுவலகம் முன்பு ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் உட்பட 800 பேர் கைது.


கோவை: தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், உரிய நேரத்தில் பென்ஷன் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல போக்குவரத்து அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை மண்டல தலைமை போக்குவரத்து அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் ஓய்வூதிய பலன்கள் அனைத்தும் ஓய்வு பெறும் போதே வழங்க வேண்டும், உரிய நேரத்தில் பென்ஷன் வழங்க வேண்டும், நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததன் காரணமாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் என 800 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...