கோத்தகிரியிலில் இருந்து கடத்தப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

கோத்தகிரியிலில் சரக்கு வாகனத்தில் மறைத்து கடத்திச் செல்லப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசியைக் குடிமைப் பொருட்கள் கடத்தல் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறைப் போலீசார் பறிமுதல் செய்ததுடன், சரக்கு வாகன டிரைவரையும் கைது செய்தனர்.



நீலகிரி: கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சமவெளிப் பகுதிக்கு செல்லும் சாலை வழியாக ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக நீலகிரி மாவட்ட குடிமைப் பொருட்கள் கடத்தல் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் மேனகா, சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார், ஏட்டுக்கள் சுமதி, முருகேசன் மற்றும் ஜெகநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர், குஞ்சப்பனை சோதனைச் சாவடியில் நேற்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக சென்ற சந்தேகத்திற்கிடமான சரக்கு வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், அதில் ரேஷன் அரிசி 40 மூட்டைகளில் நிரப்பி, மறைத்து வைக்கப்பட்டு சமவெளிப்பகுதிக்கு கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.



உடனடியாக டிரைவரை கையும் களவுமாகப் பிடித்த போலீசார், அவரிடம் விசாரித்ததில், சரக்கு வாகனத்தின் டிரைவர், ஊட்டி லவ்டேல் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டின் ஜோசப் (வயது 48) என்பதும் கீழ் கோத்தகிரி, தூனேரி பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி சமவெளிப் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது.



இதையடுத்து, டிரைவரைக் கைது செய்த போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை ஊட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

பின்னர் டிரைவர் ஜோசப் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர். கடத்தப்பட்ட ரேஷன் அரிசி எங்கிருந்து வாங்கப்பட்டது, யாருக்காக கொண்டுச் செல்லப்படுகிறது..? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...