அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளுடன் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 'யுகம் 2017' துவக்கம்


குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 'யுகம் 2017' என்னும் நிகழ்ச்சி நேற்று தொடங்கி இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 10, 11) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது



யுகம் 2017-இல் கலை மற்றும் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள், பயிலரங்கம் மற்றும் பலவற்றுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சியானது மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு மேடையாக அமையும். இந்நிகழ்ச்சியில் இந்த வருடம் 12,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.



அறிவு சார்ந்த மற்றும் பயிலரங்கம் பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. இதில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றார்கள். இந்த வருடத்துக்கான கருப்பொருள் "பெண்களின் முன்னேற்றம்" என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றனர். 



மேலும், இந்நிகழ்ச்சியில் டாக்டர் என்.மகாலிங்கம் தென் இந்திய கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி இவ்வாண்டு சேர்க்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பெண்களின் முன்னேற்றத்தைப் குறித்து மீரா எர்டா, ஷெபாலி தாதாபாய் மற்றும் நீபா நம்பூதிரி ஆகியோர் தங்களின் தூண்டுதல் மற்றும் தடைகளைப் பற்றி மாணவியர்களிடம் பகிர்ந்தனர்.



ஹீரோஸ் அன்லிமிடெட் என்ற தலைப்பில் அண்ணாதுரை, மூர்த்தி மேகவன், சேகர், பாலாஜி மற்றும் ஹரிஹரன் போன்ற சாதனையாளர்கள் தங்களின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்தனர்.



நீர் ஏவுகணைக்கான போட்டி, ரோபோகளுக்கான கால்பந்து போட்டி, ரேடியோவால் இயக்கப்படும் ஐசி என்ஜின் பந்தய போட்டி, காகிதத்தால் ஆடை அலங்காரம் செய்யும் போட்டி, மற்றும் பல போட்டிகள் இந்நிகழ்ச்சியில் நடைபெற்றது

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...