திருப்பூர் திருமுருகன் பூண்டியில் புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருப்பூர் திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் பகுதியில் காவல்துறை வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூ.1.30 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய காவல்நிலையத்தை முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன் பூண்டி, ராக்கியாபாளையம் பகுதியில் தமிழ்நாடு காவல்துறையின் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக காவல்நிலையம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.



இந்த புதிய காவல் நிலையத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக செய்தி மட்டும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பே சாமிநாதன் காவல் நிலையத்தில் குத்துவிளக்கினை ஏற்றினார்.



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகர காவல் ஆணையர் பிரபாகரன், மாநகர துணை காவல் ஆணையர்கள், அபினவ் குமார், வனிதா மற்றும் காவல் துறை சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...