சிக்கிமில் பணியின் போது வீரமரணம் அடைந்த கோவையை சேர்ந்த ராணுவ வீரர் உடலுக்கு ஆட்சியர் சமீரன் அஞ்சலி

சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கோவையை சேர்ந்த ராணுவ வீரர் மைக்கேல் சாமியின் உடல் கோவை வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சமீரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


கோவை: வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் 16 ராணுவ வீரர்கள் இறந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 ராணுவ வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்து, தொடர் சிகிச்சையில் இருந்த கோவை மாவட்டம் காரமடை ஆசிரியர் காலனியை சேர்ந்த மைக்கேல்சாமி என்ற ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மைக்கேல்சாமி இறுதியாக மேற்கு திரிபுரா மாநிலம் கோர்கா ரைபில்ஸ் ரெஜிமென்டில் பணியாற்றி வந்தார். விபத்தில் சிக்கிய மைக்கேல்சாமி உடல் உடற்கூறு ஆய்விற்கு பின் ராணுவ விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டது.



கோவை விமான நிலையம் வந்தடைந்த மைக்கேல் சாமியின் உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



இதையடுத்து அவரது உடல் ராணுவ வாகனத்தில் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...