கோவையில் தங்களது கிளையை நிறுவியது ஸ்ரீ ராம் ஆட்டோமால்


இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி நிறுவனமான ஸ்ரீ ராம் ஆட்டோமால், பழைய வாகன விற்பனை மையத்தினை கோவையல் துவங்கியுள்ளது. இந்த விற்பனையகம் இந்தியாவில் 65-வது ஆகும்.



கோவையில் துவங்கப்பட்டுள்ள இந்த விற்பனை மையமானது தமிழகத்தில் 5-வது கிளையாகும். கோவையில் இருந்து பெருந்துறை  செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த மையம் அமைந்துள்ளது. இதனால், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயனடைவர்.

இந்த  விற்பனை மையத்தின் துவக்கவிழாவின் போது ஏல விற்பனையும் நடைபெற்றது. இதில் 250 பழைய வாகனங்களும், கட்டுமானத் துறை வாகனங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டது. இதில், 110 வாகனங்கள் விற்பனையானது.

இதில் வாகனம் வாங்கியவர்களுக்கு ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம் கடனுதவி வழங்கியது. 

இந்த துவக்கவிழாவின் போது ஸ்ரீராம் ஆட்டோமால் அமைந்துள்ள வளாகத்தில் ஏராளமான மரங்கள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், 20 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...