முதல்வரிடம் மணிமேகலை விருது பெற்ற கோவை மாவட்ட மகளிர் சுய உதவி குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து..!

கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட "ஆட்சி மகளிர் சுய உதவிக் குழுவினர்" மற்றும் "ஜான்சி ராணி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மணிமேகலை விருதினை முதல்வர் வழங்கினார். விருது பெற்ற இரு மகளிர் சுய உதவிக் குழுவினரும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.


கோவை: டிசம்பர் 29ஆம் தேதியன்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கினார். மேலும் அந்நிகழ்வில் சிறப்பாக பணியாற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருது உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

அதன்படி, கோவை மாவட்டத்தை சார்ந்த சிறப்பாக செயல்பட்ட "ஆட்சி மகளிர் சுய உதவிக் குழுவினர்" மற்றும் "ஜான்சி ராணி மகளிர் சுய உதவிக் குழுவினர்" க்கு மணிமேகலை விருதினை முதல்வர் வழங்கினார்.



இந்நிலையில், விருது பெற்ற இரு மகளிர் சுய உதவிக் குழுவினரும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

விருது பெற்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவரது வாழ்த்துக்களை தெரிவித்து, மேலும் சிறப்பாக செயல்படும்படி வாழ்த்தி ஊக்குவித்தார்.

Newsletter

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....