பல்லடத்தில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்காக பூமி பூஜை

பல்லடத்தில் புதிய அங்கன்வாடி மையம், பள்ளியில் கழிவறை கட்டடம் கட்டுவதற்கான பணியை எம்எல்ஏ ஆனந்தன் தொடக்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம், அண்ணா நகரில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.



இந்நிலையில், புதிய அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பணியை பல்லடம் எம்எல்ஏ ஆனந்தன் தொடக்கி வைத்தார்.



மேலும், அண்ணா நகரில் உள்ள அரசு பள்ளிக்கு மாணவர்களுக்கு இருக்கைகள், மேசைகள் மற்றும் உபகரணங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து மங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் மாணவ,மாணவிகளுக்காக கூடுதல் கழிவறை கட்டும் பணிக்கான பூமி பூஜையையும் துவக்கி வைத்தார். 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவறை கட்டும் பணிகள் துவங்கியது.



இந்த நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...