பல்லடத்தில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்காக பூமி பூஜை

பல்லடத்தில் புதிய அங்கன்வாடி மையம், பள்ளியில் கழிவறை கட்டடம் கட்டுவதற்கான பணியை எம்எல்ஏ ஆனந்தன் தொடக்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம், அண்ணா நகரில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.



இந்நிலையில், புதிய அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பணியை பல்லடம் எம்எல்ஏ ஆனந்தன் தொடக்கி வைத்தார்.



மேலும், அண்ணா நகரில் உள்ள அரசு பள்ளிக்கு மாணவர்களுக்கு இருக்கைகள், மேசைகள் மற்றும் உபகரணங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து மங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் மாணவ,மாணவிகளுக்காக கூடுதல் கழிவறை கட்டும் பணிக்கான பூமி பூஜையையும் துவக்கி வைத்தார். 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவறை கட்டும் பணிகள் துவங்கியது.



இந்த நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...