போக்ஸோ வழக்கில் சாட்சியளித்த சிறுமியின் பெற்றோர் மீது தாக்குதல் - தந்தை, மகன் கைது

கோவையில் போக்ஸோ வழக்கில் சாட்சியளித்த சிறுமியின் பெற்றோரை தாக்கிய தந்தை மகனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கரடிமடையை சேர்ந்த 20 வயது இளைஞர் ராகவேந்திரனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவையில் உள்ள போக்ஸோ வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது ராகவேந்திரன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது, சிறுமியின் பெற்றோர் ராகவேந்திரனுக்கு எதிராக சாட்சியளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராகவேந்திரன் மற்றும் அவரது தந்தை ரங்கராஜன் சிறுமியின் வீட்டுற்கு சென்று அவரது பெற்றோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையேடுத்து, ராகவேந்திரன், அவரது தந்தை ரங்கராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...