கோவையில் தாறுமாறாக இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர்கள் - வீடியோ வைரல்

கோவையில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளுக்கு ஊர்வலமாக சென்ற இரண்டு அமைப்பை சேர்ந்தவர்கள், சாலையில் தாறுமாறாக வாகன ஓட்டிச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.



கோவை: விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டது. அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதில் ஒரு பகுதியாக, கோவை ஈச்சனாரியில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக தமிழ்நாடு நாயக்கர் முன்னேற்ற கழகம், அகில பாரத யாதவ மகா சபாவை சேர்ந்த நிர்வாகிகள், 200 க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஊர்வலமாக சென்றனர்.



அப்போது, கோவை பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரம் அருகே செல்லும்போது, சத்தமாக கத்தியபடியும், வாகனங்களை தாறுமாறாக ஓட்டியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியபடி சென்றனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...