முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலால் 30 காட்டுப் பன்றிகள் பலி

முதுமலை புலிகள் காப்பகத்தில் வேகமாக பரவி வரும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலால் 30-க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: கடந்த சில நாட்களாக முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 50-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் தாக்கி இறந்து வருகின்றன. இந்த நிலையில் அந்த தொற்று முதுமலை புலிகள் காப்பகத்திலும் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது.



கடந்த 2 நாட்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்துள்ளன. அவற்றின் உடல்களை மீட்ட வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து எரித்து வருகின்றனர்.



குறிப்பாக இன்று மட்டும் 4 பன்றிகளின் உடல்களை கைப்பற்றி அவற்றின் உடல் பாகங்கள் சேகரிக்கபட்டு ரசாயன பரிசோதனைகாக அனுப்பி வைக்கபட்டுள்ளன.



இதனால் புலிகள் காப்பக வனத்துறையினர் அச்சமடைந்துள்ளனர்.

தற்போது இறந்துள்ள பன்றிகள் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு தினந்தோறும் வந்து உணவு சாப்பிட்டு செல்பவை என்பதால் வளர்ப்பு யானைகளுக்கு பரவி விடாமல் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.



குடியிருப்பு பகுதிகள், யானை முகாம் பகுதிகளுக்குள் காட்டு பன்றிகள் வராமல் தடுக்க சுற்றி சேலைகள் கட்டபட்டுள்ளன.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...