கர்நாடக அரசு பேருந்தில் உதகைக்கு கடத்தி வரப்பட்ட 50 பண்டல் குட்கா பறிமுதல்

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் மேற்கொண்ட சோதனையில், கர்நாடக அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 50 பண்டல் குட்கா பொருட்களை, இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் கைப்பற்றி, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஆனது வடக்கே கர்நாடகா மாநிலமும், மேற்கே கேரளா மாநிலமும் எல்லைகளாக கொண்டுள்ளது. இதனால், சட்டவிரோதமாக ரேசன் அரிசி, மரம் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தல் சம்பவங்களை தடுக்க மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சமீப காலமாக கர்நாடக மாநிலத்திலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, உதகை மத்திய பேருந்து நிலையத்திற்கு, கர்நாடகா மாநிலத்திலிருந்து வரும் KSRTC அரசு பேருந்தில், போதை பொருட்கள் கடத்தி வருவதாக உதகை நகர் மேற்கு காவல் நிலைய G1 காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் பேருந்தில், கர்நாடக அரசு பேருந்தில் சோதனை செய்த போது, 50 பண்டல் போதை வஸ்து (Hans) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவற்றை சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டியை காந்தராஜ் (33) என்ற நபர் எடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதனையடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...