கோவையில் அரசு பேருந்து மோதி பலியான தூய்மை பணியாளர்கள் - ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க கோரி ஆட்சியரிடம் சமூக நீதிக்கட்சி மனு

கோவையில் இன்று காலை அரசு பேருந்து மோதி உயிரிழந்த தூய்மைப் பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சமூக நீதி கட்சி சார்பில் மனு.


கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் - தேவி தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கணவன், மனைவி இருவரும் கோவை மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை பணிக்காக சைக்கிளில் சென்ற போது, அரசு பேருந்து மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



இதனிடையே உயிரிழந்த தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க கோரி சமூக நீதி கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், உயிரிழந்த தூய்மை பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

மேலும் தூய்மை பணியாளர்களின் வேலை நேரத்தை காலை 7 மணியாக மாற்றிட வேண்டும். இவ்வாறான கோரிக்கைகள் அந்த மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

தூய்மை பணியாளர்களின் நேரம் குறித்து சமூக நீதி கட்சியின் சார்பில் பலமுறை ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...