கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற நபருக்கு 3 ஆண்டுகள் சிறை..!

கோவை பொள்ளாச்சி அருகே கடந்த 2018 ஆம் ஆண்டு சுமார் 1.3 டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற பால்பாண்டி என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து, நீதிமன்றம் உத்தரவு.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த திவான் புதூர் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (43). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது இருசக்கர வாகனத்தில் மலையாண்டி பட்டணத்தில் இருந்து கோட்டூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வாகன தணிக்கையில் இருந்த குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் பால்பாண்டியை பிடித்து சோதனை செய்தபோது, அவரது இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோட்டூர் அருகே புளியமரத்தடியில் சுமார் 1.3 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் இவர், பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை மலிவு விலையில் வாங்கி, அதை அதிக லாபத்தில் கேரளாவிற்கு விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்து பால்பாண்டி குற்றவாளி என நீதிபதி சரவணபாபு அறிவித்தார்.

தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற குற்றத்திற்காக அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறை தண்டனை என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...