கழிவுப்பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகளில் தொடரும் நெருக்கடி

கழிவுப் பஞ்சு விலை உயர்வால் நூல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: நூற்பாலைகளில் இருந்து பெறப்படும் முதல் தர கழிவுப் பஞ்சு மூலம் ஓபன் எண்ட் (ஓஇ) மில்களில் நூல் தயாரித்து, ஜீன்ஸ், திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஜவுளி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பஞ்சு விலை குறைந்த போதும் கழிவுப் பஞ்சு விலையை நூற்பாலை நிர்வாகத்தினர் குறைக்காததால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.



தமிழ்நாடு ஓபன் எண்ட் கழிவுபஞ்சு நூற்பலைகள் சங்கத்தின்(ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறும்போது, “முதல் தர கழிவுப் பஞ்சு (கோம்பர் நாயில்) ரூ.140-க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. இன்று பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ.60 ஆயிரமாக உள்ள நிலையில் கழிவுப் பஞ்சு விலை ஒரு கிலோ ரூ.80-க்கு கிடைத்தால்தான் ஏற்புடையது.

நூற்பாலை தொழில்துறையினரின் இந்த நடவடிக்கையால் கழிவுப் பஞ்சு தொழில், விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட ஜவுளிச் சங்கிலி தொடரிலுள்ள பல தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஜவுளித்தொழிலில் எந்த ஒரு குறிப்பிட்ட துறை மட்டும் அபிரிமிதமான லாபத்தை ஈட்டி மற்ற தொழில்களை பாதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். இருப்பினும் நூற்பாலை நிர்வாகத்தினர் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை”என்றார்.



மறுசுழற்சி ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறும்போது, “கடந்த 1984-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பஞ்சு விலையில் 45 முதல் 50 சதவீதம் வரை தான் கழிவுபஞ்சு விற்பனை செய்யப்பட்டது. இன்று பஞ்சு விலையில் 75 முதல் 80 சதவீதம் வரை கழிவுப்பஞ்சு விலை உள்ளது. கழிவுப் பஞ்சு நூற்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் நூல் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஆடை தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

விலை ஏற்றத்தால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுடன் போட்டியிட முடியாத சூழல் உள்ளது. வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இதை பயன்படுத்தி ஜவுளிப்பொருட்களை அதிகளவு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. எனவே கழிவுப் பஞ்சு நியாயமான விலையில் கிடைக்க நூற்பாலை நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.

நூற்பாலை தொழில்துறையினர் கூறும்போது, “பஞ்சு விலையில் நிலவும் நிலையற்ற தன்மையால் நூற்பாலைகள் இயக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விற்பனைக்கு வரும் முதல் தர கழிவுப் பஞ்சின் அளவு 40 சதவீதம் வரை குறைந்துள்ளது” என்றனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...