நீலகிரி மாவட்டத்திற்குள் வெளிமாநிலங்களில் இருந்து வளர்ப்பு பன்றிகளை எடுத்துவர தடை

ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்திற்குள் வெளிமாநிலங்களில் இருந்து வளர்ப்பு பன்றிகளை எடுத்து வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என கால்நடை பராமரிப்பு துறை எச்சரித்துள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காட்டு பன்றிகள் இறந்து வருகின்றன.



உடற்கூறு ஆய்வில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் தொற்றினால் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து கண்காணிப்பு பணியை தீவிரபடுத்திய நிலையில், ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் வீரியம் குறையும் வரை வளர்ப்பு பன்றிகளை வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் கொண்டு வரவும் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கால்நடை பராமரிப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றி 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளில் கால்நடை மருத்துவ குழு ஆய்வு மேற்கொண்டதில் எந்த பண்ணைகளிலும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் அறிகுறிகளோ நோய் தொடர்பான இறப்புகளோ எதுவும் இதுவரை இல்லை என்று தெரியவந்துள்ளது.

மேலும் அந்த வளர்ப்பு பன்றி பண்ணைகளை சுற்றி வேலிகள் அமைத்து காட்டுப்பன்றிகள் பண்ணையில் நுழையாதவாறும், பண்ணையைச் சுற்றி பிளீச்சிங் பவுடர் தெளிக்கவும் கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...