கோவை சாடிவயல் அருகே ஆற்றங்கரையோரத்தில் இறந்த யானையின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு - வனத்துறை விசாரணை

சாடிவயல் பெரியாற்றில் கிடந்த எலும்புக்கூடு 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடையது என்றும், யானை இறந்து சுமார் 3 மாதங்கள் ஆகியிருக்கலாம் என ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவ குழு தகவல்.


கோவை: கோவை மாவட்டம் சிறுவாணி வனப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள சாடிவயல் பெரியாற்றில் அப்பகுதி பழங்குடி கிராம மக்கள் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது ஆற்றங்கரை ஓரத்தில் இறந்த யானையின் எலும்புக்கூடுகள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.



இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போளுவாம்பட்டி வனச்சரக அதிகாரிகள் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். முதல் கட்ட ஆய்வில் இறந்தது 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது.



மேலும், யானை உயிரிழந்து சுமார் 3 மாதங்கள் ஆகி இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. யானையின் இறப்பிற்கான காரணம் குறித்து கண்டறிய எலும்புகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யானை உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...