கோவையில் 2 மாத நாய்க்குட்டி கொடூரமாக தாக்கி கொலை - போதை ஆசாமி வெறிச்செயல்

கோவை வடவள்ளி சோமையம்பாளையத்தில் குடிபோதையில் 2 மாத நாய் குட்டியை அடித்துக் கொல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை வடவள்ளி சோமையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (26), தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், 2 மாத நாய்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார்.

இவரது வீட்டின் அருகே செந்தில் (30) என்பவர் வசித்து வருகிறார்.



குடிபோதையில் வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்த செந்தில், தெருவில் நின்றிருந்த நாய்குட்டியை கற்கள் மற்றும் கம்பால் கொடூரமாக தாக்கி கொன்றதாக கூறப்படுகிறது.

இதை தட்டிக்கேட்ட சிவக்குமாரையும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிவக்குமார் அளித்த புகாரின்பேரில் வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது 2 மாத நாய்குட்டியை கொடூரமாக தாக்கி கொல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...